செவ்வாய், 10 நவம்பர், 2015

மௌத்து அறிவிப்பு. பெரிய கடைத்தெரு ஹாஜி கொய்யா N. முகம்மது தாவூது மரைக்காயர் அவர்கள்.

முத்துப்பேட்டை பெரிய கடைத்தெரு பூ கொய்யா இல்லம்  மர்ஹூம் நெய்னா முசா  அவர்களுடைய  மகனும், M. பூக்கொய்யா  அப்துல்  ரஹ்மான்,  M. ஹலீல் ரஹ்மான்  இவர்களுடைய  தகப்பனாரும்,


  மர்ஹூம்  கொய்யா  N.  ஐதுருஸ்,  மர்ஹூம்  கொய்யா  ஹாஜி  N . அப்துல்  ரெஜாக்,  மர்ஹூம்  கொய்யா  N. ஹபீப்கான்   இவர்களுடைய  சகோதரருமான  ஹாஜி   கொய்யா   N. முகம்மது  தாவூது மரைக்காயர்  அவர்கள்  இன்று  அதிகாலை 3 மணியளவில்  மௌத்தாகி  விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 12.00 மணிக்கு குத்பா பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம்  செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...