சனி, 7 நவம்பர், 2015

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் சென்னை வந்தார்: வீடியோ இணைப்பு.


சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  வந்த  தமிழ் பெண்மணி கஸ்தூரி அம்மாள் முனி ரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில் தொடர்  சிகிற்சை  பெற்று வந்தார்.




அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து கஸ்தூரி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அரசு அதிகாரிகள்  அவரை  சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், கஸ்தூரிக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மகன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளார்.

 'இந்தியன் சோசியல் போரம்' என்ற இஸ்லாமிய அமைப்பின் தொடர் முயற்சிகளாலும், சவூதி அரசும்,  இந்தியா தூதரகமும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகளால் அது  சம்பந்தமான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கஸ்தூரியை     இன்று சனிக்கிழமை சென்னைக்கு   சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கும் ஏற்பாடுகளை  தாயகத்தில் உள்ள  'சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா செய்தது. 

இந்த செய்தியை எந்த ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தெரிவிக்கவில்லை.






திருட வந்த இடத்தில் ஏழ்மை நிலைகண்டு மனம் வெதும்பிய திருடன் செலவுக்கு 1000 கொடுத்த சம்பவம்.

திருட வந்த இடத்தில், அவ்வீட்டாரின் ஏழ்மை நிலையை கண்டு மனம் வெதும்பிய திருடன், அவர்களிடம், 1,000 ரூபாய் பணம் கொடுத்து சென்றுள்ளான்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி. படங்கள் இணைப்பு.


பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு இன்று காலை தனியார் பஸ் புறப்பட்டு  வந்தது. இந்த பஸ் காலை 8.40 மணியளவில் தஞ்சை அருகே உள்ள  சூரக்கோட்டை சைதாம்பாள்  புரத்தில் வந்து கொண்டிருந்தது.

வயதுக்கு வந்த ஆண்கள் & பெண்களுக்காக.....வீடியோ இணைப்பு.

வாலிப  வயதில்  ஆண்கள்  & பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிய மூலிகை  வைத்தியத்தை  மூலிகை வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்கள் செய்து காட்டுகிறார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்.

 சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழக நண்பர் ஒருவருக்கு, சிங்கப்பூர் ICA ஆபீஸிலிருந்து (Immigration and Checkpoint Authority) பேசுவதாக ஒரு தொலைபேசி  அழைப்பு  வந்துள்ளது.

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!


தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம்  என்றும்  சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 6 நவம்பர், 2015

துபையில் முடங்கிக்கிடக்கும் சிவகங்கை தொழிலாளி: மனைவி, 4 குழந்தைகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு...


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பம், நாடு திரும்ப வழியின்றி  துபையில்  முடங்கிக்  கிடப்பதாகப்  புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்,  காளையார் கோவிலைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (39). இவரது மனைவி பிரான்மலையைச் சேர்ந்த கவிதா (37). இவர்களுக்கு இஷிதா (9 ),  ஷிரியா (7)  ஆகிய  2 பெண் குழந்தைகளும், காளீஸ் (5), நமீத் (3) என 2 ஆண்   குழந்தைகளும்   உள்ளனர்.

மனிதனால் வீசப்பட்ட குழந்தை நாயினால் காப்பாற்ற பட்ட சம்பவம் ஓமனில் நடந்துள்ளது.

வீதியில்  வீசப்பட்ட குழந்தை  நாய் வாயால் கௌவ்விச் செல்லும் படம் இணையத்தில்  வெளியாகி  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சவுதி அரேபியாவில் கையை இழந்த தமிழக பெண் கஸ்தூரி நாளை தமிழகம் திரும்புகிறார்.

சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  வந்த  தமிழ் பெண்மணி கஸ்தூரி அம்மாள் முனி ரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில் தொடர்  சிகிற்சை  பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே. 

வியாழன், 5 நவம்பர், 2015

இந்திய பணியாளர்களுக்கு விசாவை நிறுத்தியது குவைத் நாடு.


வளைகுடா  நாடுகளில் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து  பணிப்பெண் உள்ளிட்ட வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருவாரூரில் காரில் இருந்த பெண்ணை ஏமாற்றி ரூ.15 ஆயிரம் பணம் அபேஸ்.

திருத்துறைப்பூண்டி  அருகே  உள்ள  கீராகலுரை சேர்ந்தவர் பூங்குழலி (வயது–53) இவரும், அவரது மகள் சுதா (28) என்பவரும் நேற்று காரில் திருவாரூர்  வந்தனர். 

அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்.


உலகப் புகழ்பெற்ற சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள்  தலைவர்  கில்டிமோர். 
இவரும்  மற்ற  2 பேரும் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு குட்டி விமானத்தில்  புறப்பட்டு  சென்றனர். 

உயர் இரத்த அழுத்ததில் அவதிப்படுவோருக்கு மிக எளிய மூலிகை வைத்தியம். வீடியோ இணைப்பு.

உயர் இரத்த அழுத்ததில் அவதிப்படுவோருக்கு மிக எளிதான முறையில் மூலிகை வைத்தியம். காணத்தவறாதீர்கள்.

"கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தால் நான் பேட்டியளிக்க மாட்டேன்" - ‪ஹாசிம் ஆம்லா‬


சமீபத்தில் நடந்த இந்திய தென்ஆப்ரிக்க கிரிக்கெட் தொடரின் போது ஒவ்வொரு  கிரிக்கெட் வீரர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சிறப்பு பேட்டி எடுத்து வந்தனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சியில் கொசு உற்பத்தி அதிகரிப்பு. நோய் பீதியில் மக்கள்.

முத்துப் பேட்டையில் கொசு உற்பத்தி அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர் முகம்மது  மாலிக்  புகார்  தெரிவித்துள்ளார். 

நேற்று அவர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 

முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையம் எதிரே வாலிபருக்கு அடி,உதை.

முத்துப் பேட்டை  போலீஸ்  நிலையம்  எதிரே வாலிபரை, மர்ம நபர்கள் அடித்து,  உதைத்தனர்.

திருவாரூர்  மாவட்டம், முத்துப் பேட்டை காவல்  நிலையம் எதிரே உள்ள ஒரு கடை வாசலில் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் நேற்று நின்று கொண்டிருந்தார். 

புதன், 4 நவம்பர், 2015

இயக்கமா ? இஸ்லாமா ? நீங்களே முடிவெடுங்கள்!


துவங்கி விட்டது சகோதர யுத்தம்!

கொடிக்கும் பெயருக்கும் 
கோர்ட்டில் வழக்கு!

பரஸ்பரம் குற்றச்சாட்டு !

ஆப்பிளின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஹேக் செய்த குழுவுக்கு ஒரு மில்லியன் பரிசு வழங்கப்பட்டது.


ஆப்பிள்  நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வெளியிட்ட புதிய ஐ.ஓ.எஸ். 9 வரிசை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ‘ஹேக்’ செய்பவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கவிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் இயங்கிவரும் ‘ஸீரோடியம்’ என்னும் நிறுவனத்தை   நடத்திவரும்   சாவ்க்கி  பேக்ரார்  குறிப்பிட்டிருந்தார்.

102 வது மசூதியை வடிவமைக்க இருக்கும் திருவனந்தபுரம் கோவிந்தன் சகோதரர்கள்.



கேரளாவில் புதிய மசூதிகள் கட்டுவதானாலும் அல்லது பழைய மசூதி புதுப்பிக்கப் படுவதானாலும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் இவர்தான்..

திருவனந்தபுரத்தைச் சார்ந்த கோவிந்தன் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து சகோதரர்கள்.

முத்துப்பேட்டையில் இளைஞர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை டிராவல்ஸ் பங்களா சாலையில் வசிப்பவர் குமார். இவரது மகன் ஆனந்த(24).

 இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்  மர்ம  காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 நவம்பர், 2015

ஆன்லைனில் டிவி ஆர்டர் செய்தவருக்கு செருப்பு அனுப்பி வைத்த நிறுவனம். வீடியோ இணைப்பு.

சிவகங்கை மாவட்டம் எஸ்பி மங்கலத்தை  சேர்ந்த ராசு மனோகர் என்பவர் ஸ்னாப்டீல்  ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தள்ளுபடி விலையில்  டிவி விற்பதாக வந்த தகவலை நம்பி 21,499.00  பணத்தை  கட்டியவருக்கு

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்.


மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மௌத்து அறிவிப்பு. திமிலத் தெரு " R. முகம்மது இபுராஹீம் " அவர்கள்.


முத்துப்பேட்டை   திமிலத் தெரு " தேனா. சீனா "  காலனியில் வசிக்கும் மர்ஹூம்  ராவுத்தர் நெய்னாமலை அவர்களுடைய  மகனும்,  மல்லிப்பட்டினம்   தாஜுதீன்  அவர்களுடைய   மருமகனும்,   R. சாகுல் ஹமீது அவர்களுடைய   சகோதரும்,

முத்துப்பேட்டை அருகே இளம் பெண் காரில் கடத்தல்.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்ட புரம், கீழக்காடு  பகுதியைச்  சேர்ந்த  தங்கராசு மகள் சவுந்தர்யா (வயது 20).

இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது தோழி என்ற இடத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (25)  உள்பட  3 பேர் காரில்  வந்தனர்.  அவர்கள்   சவுந்தர்யாவை அவரது  அக்காள்  மற்றும் பாட்டி முன்னிலையில் காரில் கடத்தி  சென்றனர்.

வீட்டு வேலை செய்யும் தமிழகப்பெண்ணுக்கு துபாய் மெட்ரோ தங்கம் வழங்கியது.


பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், டிராம் ரயில்கள் மற்றும் மோட்டார் படகுகள் இவைகளைப் மேலதிகமாக பயன்படுத்த பொதுமக்களை  Dubai RTA  (Roads and Transport Authority)  ஊக்குவித்து  வருகிறது.

திருடியதை திருப்பி கொடுக்க வந்தபோது போலீஸில் சிக்கினார்.


திருடிய சூட்கேஸில் துணிகளும் சான்றிதழ்களும் மட்டுமே இருந்ததால், அதைத்  திருப்பிக் கொடுக்க  முடிவு செய்தவர், போலீஸிடம் பிடிபட்டார்.

சென்னை  ரயில்  நிலையங்களில் ஏராளமான திருட்டில் ஈடுபட்ட 52 வயதான  ஒருவர்,  கடந்த சனிக்கிழமை செயின்ட் தாமஸ் மவுண்டில் திருடிய  சூட்கேசைத்  திருப்பிக் கொடுக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் திருடுபோன சொந்த குழந்தையின் வருகைக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கும் பார்வையற்ற தம்பதி


அரசு மருத்துவமனையில்  திருடப்பட்ட குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர் மதுரையைச்  சேர்ந்த  பார்வையற்ற தம்பதி.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி மாரீஸ்வரி. இருவரும் பார்வையற்றவர்கள். முத்துமாணிக்கம் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் ஆபரேட்டராகப்  பணிபுரிந்து  வருகிறார்.

திங்கள், 2 நவம்பர், 2015

கே. பாக்யராஜின் பள்ளிப்பருவத்தில் நடந்த சுவையான அனுபவம். வீடியோ இணைப்பு.

திருச்செங்கோட்டில்  நடந்த இது நம்ம மேடை    பேச்சரங்கத்தில் கே. பாக்யராஜ் பேசும்போது தன்னுடைய பள்ளிப்பருவத்தில் நடந்த சுவையான அனுபவத்தை சொல்லி   அரங்கத்தில் உள்ளவர்களை  கலகலப்பாக்குகிறார்.

நமது உடல் உறுப்புக்கள் செயல் படும் விதத்தை அறிந்து கொண்டால் நோயின்றி வாழலாம்.


நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து  கொண்டு  சுழன்று  கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு  உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம்  ஒதுக்கியுள்ளது.

துபாயில் 1830 அடி உயரத்தில் இரும்புக் கயிற்றில் ஜிப்லைன் சாகசம்:


சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என ஏற்கனவே அழைக்கப்படும் துபாய் நாட்டின் பிரபல புர்ஜ் கலிபா கட்டிடத்தின் அருகே சுற்றுலாவாசிகளை கவரும் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் தேவை இல்லை: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.


பெட்ரோல்,  டீசல்  மற்றும் கியாஸ்   போன்றவற்றுக்கு   பதிலான மாற்று  உந்து சக்தியாக  ஒருமுறை  ரீசார்ஜ்  செய்தால்   400 மைல் (சுமார்  643  கிலோமீட்டர்) வரை தங்கு தடையின்றி  செல்லும் வகையில்  

ஞாயிறு, 1 நவம்பர், 2015

உடைக்க முடியாத பாஸ்வேர்டுகள் விற்பனைக்கு: அமெரிக்காவை கலக்கும் 11-வயது இந்திய வம்சாவளி மாணவி.


123456- இதுதான்  உலகில்  அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (password) என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆகவேண்டும், அடுத்த இடத்தில் உள்ளது password.

ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்: இந்தியாவுக்கு ?


சர்வதேச  அளவில்  ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 சர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை ஐக்கிய  நாடுகள்  சபை,  உலக  வங்கி  மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடன்  இணைந்து  உருவாக்கியுள்ளது. 

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...