ஞாயிறு, 15 நவம்பர், 2015

தொடர் மழை காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய தகவல்.


1. தொடர்  மழையின்  காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.


2. அத்தியவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கவும். முக்கிய தேவையின்றி  வீட்டினை  விட்டு  வெளியில் வருவதை  தவிர்க்கவும்.

3.  கூடுமான  வரை  பொது  போக்குவரத்தை  பயன்படுத்தவும்.

4. தேங்கிய நீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்.  கவனமாக இருக்கவும்

5.  வயதானவர்கள்  வீட்டில் இருந்தால் அவர்களது உடல் நிலையை தொடர்ந்து  கண்காணிப்பது  நலம்.

6.  வாகனங்களை இயக்கும் முன் வாகனத்தின் நிலை, செல்லும் பாதை ஆகியவற்றின்  பாதுகாப்பு  நிலையை  முன்கூட்டியே  உறுதிபடுத்துங்கள்.

7.   மரம் அருகில்  நிற்காதீர்கள்   வண்டிகளையும்   நிறுத்தாதீர்கள்.

8.  மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் இருப்பு வையுங்கள் (இன்வெர்ட்டர் இருந்தாலும் )

9.  மின்சாரம் இருக்கும்போதே தேவையானதை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

10.  அவசர  கையிருப்புக்கு  ATM ல் பணம்  எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

11.  மருந்து மாத்திரைகள் அவசரத் தேவைக்கு வாங்கி வையுங்கள் மழையால் கடைகள்  மூடப்பட்டால் சிரமம்.

12.  ப்ரெட்,முட்டை போன்ற உணவுப் பொருட்கள் அவசரநிலையில் உணவிற்கு உதவும்.

13.  தாழ்வான பகுதியிலிருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது அரசு தரும் உதவிகளை ஏற்று பாதுகாப்புடன் இருக்கவும்.


...தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...