புதன், 4 நவம்பர், 2015

முத்துப்பேட்டையில் இளைஞர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை டிராவல்ஸ் பங்களா சாலையில் வசிப்பவர் குமார். இவரது மகன் ஆனந்த(24).

 இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்  மர்ம  காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.



இதனையடுத்து  தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று ஆனந்துக்கு காய்ச்சல் அதிகமானது இதனையடுத்து முத்துப்பேட்டை   அரசு  மருத்துவ  மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 அங்கு ஆனந்தை பரிசோதித்த டாக்டர்கள் இதில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதுபோல் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அங்கிருந்து 108-ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்த் கொண்டு செல்லப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவ  மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இந்தநிலையில் ஏற்கனவே சமீபத்தில் முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மங்களூர் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர்.

 இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரவி மேலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

படம் & செய்தி .மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  இளைஞர் ஆனந்த்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...