முத்துப்பேட்டை அருகே வசூல் போட்டியால் மோதிக் கொண்ட தனியார் பேருந்துகளின் 4 டிரைவர், கண்டக்டர்கள் கைது செய்யப் பட்டனர்.
முத்துப் பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக் கோட்டைக்கு போட்டி போட்டு கொண்டு வந்து கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் உப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் தகராறு செய்து ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து இரு தரப்பினரும் முத்துப் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து எஸ் எஸ்ஐ வேதரெத்தினம் வழக்கு பதிவு செய்து டிரைவர்கள் ரவிச்சந்திரன், பிரகாஷ், கண்டக்டர்கள் குகன்ராஜ், பாலசுந்தரம் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக