அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலாராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிபர் ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விண்வெளி அறிஞர்களுக்கான விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்தினார்.
இந்நிலையில் மாணவர் குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அகமது முகமதுவின் கல்வியை தொடரும் பொருட்டு அறிவியல் மற்றும் சமுதாய மேம்பாட்டுக்கான கத்தார் பவுண்டேசன் வழங்கிய வாய்ப்பை ஏற்று குடும்பத்துடன் அந்த நாட்டுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளோம்.
அகமது முழு உதவித்தொகையுடன் தனது பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை கத்தாரில் படிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக