தூத்துக்குடியிலிருந்து ஈசிஆர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரக் வாகனத்தில் 28 குயூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட கண்டெய்னரில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்றது.
வாகனத்தை தூத்துக்குடி மாவட்டம் மாவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி மகன் ராஜ்குமார் ( வயது 28 ) ஓட்டிவந்தார். கண்டெய்னரில் டைல்ஸ் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அதிரை ஈசிஆர் சாலை பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையின் வளைவில் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பேருந்து நிலைய பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெருக்கடியை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். கவிழ்ந்த கண்டெய்னர் ட்ரக் வாகனத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக