திங்கள், 26 அக்டோபர், 2015

நபிபெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாய்மொழி கேட்டு எழுதப்பட்ட குரான்?..


கடந்தவாரம் இங்கிலாந்து சென்றிருந்த பொழுது, பிர்மின்ஹாம் ("Birmingham") பல்கலைக்  கழகத்துக்குச்  செல்லும்  வாய்ப்புக் கிட்டியது. 

அங்குள்ள  நூலகம் வாடிகன் நூலகம்-(Vatican Library) மற்றும் (Paris) பாரிஸில் உள்ள பிரான்ஸ் தேசிய நூலகம்  (France National Library)
ஆகியவற்றை அடுத்து, பலநூற்றாண்டுகளுக்கு முந்தய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான நூல்களின் மூலக் கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்து வைத்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய நூலகமாகும்.

 அங்குதான், இந்தப்  பொக்கிஷத்தைக் காணும் பாக்கியம் கிடைத்தது. இதுவே-  இதுவரை  கிடைத்துள்ள புனித அல்-குர் ஆனின் மூலக் கையெழுத்துப்  பிரதிகளில்  பழமையானது  என்று  நம்பப்படுகிறது.

 19ம்  நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல் எட்வர்ட் காட்பரி (Edward Cadbury) (பலரும் ஆசை ஆசையாய் சாப்பிடும் காட்பரி சாக்லட் (Cadbury Chocolate) நிறுவனத்தின் பிதாமகர்) அவர்கள் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு, மத்திய  கிழக்கு நாடுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அல்போன்ஸ்  மிங்கனா  (Alponse Mingana)  என்பவர் கைகளில்தான், இந்த அரிய  கையெழுத்துப்  பிரதி  கிடைக்கபெற்றுள்ளது.

ரேடியோ கார்பன் (Radio Carbon)  எனும் நவீன தொழிநுட்ப முறை மூலம் இதனை  ஆராய்ந்து அறிந்ததில், இது 568 முதல் 645ம் ஆண்டுகாலப் பகுதியில்  இது  எழுதப்  பட்டிருப்பதாக  கண்டுபிடித்துள்ளார்கள்.

 அவ்வாறெனில் நபிபெருமான் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில், அவருக்கு வந்திறங்கிய இறைவசனங்களை  அவரது  வாய்மொழி மூலம் கேட்டு எழுதப்பட்ட பிரதிகளுள் ஒன்றாயிருக்கலாம் என்று அனுமானிக்கின்றார்கள்.

 அக்டோபர் 2 முதல் 25 வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷத்தை அக்டோபர் 7ம் திகதி நேரில்  சென்று  காணும்  பாக்கியம்  எனக்கு  கிடைத்தது.

 இப்பொக்கிஷத்தைத் தேடிக் கண்டெடுத்தவரும், அதற்குப் பொருளதவி செய்தவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்களல்ல. அதுபோல் இவ்வரிய ஆவணத்தைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களில் 90% வீதமானவர்களும், இஸ்லாமியர்கள் அல்ல.

 மதமாச்சரியங்கள்  கடந்து, புனிதமிகு இந்த வரலாற்று ஆவணத்தைக் காண வந்திருந்தவர்களைப்  பார்த்து வியந்து, நம் எல்லோரையும் படைத்த அந்த ஏக  இறைக்கு  நன்றியைத்  தெரிவித்தேன்.

(இவ்வரிய அனுபவத்தினைப் பெற எனக்குதவிய நண்பர்கள், திரு நிமால் சண்முகநாதன், திரு மயூரன் ஆகியோருக்கு வல்ல இறை நல்லருள் புரிவானாக)

பி.ஹெச். அப்துல் ஹமீத். (B.H. Abdul Hameed)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...