திங்கள், 23 நவம்பர், 2015

ஒரு மாத மின் கட்டணம் ரூ.39 கோடி… அலறிய வீட்டு உரிமையாளர்!

படிக்கும் நமக்கே ஷாக் அடிக்கிறது. கடந்த  மாதத்திற்கான மின் கட்டணம் 39 கோடி  ரூபாய்  என பில்  வந்த வீட்டில் எப்படியிருக்கும்.!


ஜம்மு கஷ்மீரில், புரான்நகர் என்ற பகுதியில் வசிக்கும் ராம் க்ரிஷன் என்பவரின்  வீட்டில்தான் இந்த ஷாக்  அடித்திருக்கிறது. 

தங்களுக்கு  சற்றும் சம்பந்தமில்லாத மின் கட்டண ரசீதை பெற்றிருக்கும் ராம் க்ரிஷன்  குடும்பத்தினர், “நாட்டின் மிகப் பெரிய பணக்காரருக்குக் கூட ஒரு  மாத கரண்ட் பில் 39 கோடி ரூபாய் வராதே!” என  நொந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அலுவலரிடம் புகார் அளித்தபோது, “மின் கட்டணத்தை  கணக்கிடும் மென்பொருளில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். கூடிய விரைவில் இப்பிரச்னை சரி செய்யப்படும்” என கூறியுள்ளனர்.

உலகமே  அழிந்தாலும்  இவ்வளவு பெரிய தொகை ஒரு மாதத்திற்கான மின் கட்டணம் சாத்தியமில்லை என்பதால் ராம் க்ரிஷன் வீட்டிற்கான மின் கட்டணம்  சரி  பார்க்கப்படவுள்ளது.

நன்றி :விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...